திங்கள், 18 நவம்பர், 2013

இறந்துபோய்.. 4 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் உயிரோடு ...!


ஆப்பிரிக்கா..தென்பகுதி...மழையின்றி காய்ந்து கெட்டியாகிப் போன களிமண்ணுக்குள் ..உறைந்து போய்.. 4 ஆண்டுகளுக்குப் பின் .. மழை நீர் பட்டவுடன் ..உயிர் பெற்று எழும் ..மீன் இனத்தின் கதை .
இந்த மீனுக்கு .. இந்த நுட்பம் கற்றுத்தந்தது யார் ??
மழையின்றி காய்ந்து போகும் நீர்நிலைகள்...உயிர் பிழைக்கப் ஏங்கும் மீன்கள்
தரையெல்லாம் வெடித்துப் பாளங்களாக...கீழே பொந்துகள் அமைத்து, தனக்குள் அடங்கி உறைந்து போகின்றன மீன்கள்
நாளடைவில் கட்டாந்தரையான பகுதியிலிருந்து மண்கட்டிகள்( உள்ளிருக்கும் மீன்களோடு) வெட்டி எடுக்கப்பட்டு , மண்செங்கற்களாகி, வீட்டின் சுவராகவும் ஆகிறது
4 ஆண்டுகளுக்குப்பின்..மழை...சுவர் நனைந்து ..உள்ளிருக்கும் மீன் மீது மழைத்துளி பட்டவுடன்..உயிர்த்தெழுகிறது உயிர்.. நெடுநாள் காத்திருப்புக்குப் பின்..உயிர்பெற்று நீர்நிலையத் தேடி புறப்படுகிறது மீன் ..
மீண்டும் மீண்டும் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கிறது இந்தச் சுழற்சி..
இதை அறிந்துதான்...வான் மழையை அமுதென்று சொன்னாரா வள்ளுவர்!!!!!!!

2 கருத்துகள்: