ஞாயிறு, 18 ஜனவரி, 2015

இதுவா ஜல்லிக்கட்டு !?


ஜல்லிக்கட்டுக்கும் , ஏறுதழுவுதலுக்கும் உள்ள வித்தியாசம் என்னான்னு பாப்போம்..
1.
இது இப்போதைய ஜல்லிக் கட்டு ..இதில் என்ன நடக்குது ? வாடிவாசலில் வெளிவரும் ஏறு/காளையின் திமிலை ஒருகுறிப்பிட்ட தொலைவு வரையிலும் தழுவி/ அணைத்துச் செல்வதுதான் வெற்றிக்கு அடையாளம் .....அதாவது ஏறுதழுவது ... இதுவே ஏறு தழுவுதல்...... இப்போ ஜல்லிக் கட்டு என்னும் பேரில் நாம் பார்த்துக்கிட்டு இருக்கிறது ஏறுதழுவுதல் தான்.. இதைத்தான் தடை செய்திருக்கிறார்கள்

2.
இதுவும் ஜல்லிக்கட்டுதான்
இந்த முறை: - வேலியிடப்பட்டத் திடலுக்குள் நடக்கும் .
ஜல்லி / சல்லி - அக்காலப் பணம் - காளையின் கொம்பில் / நெற்றியில் கட்டப்பட்டிருக்கும் - கட்டப்பட்டிருக்கும் சல்லியை எடுப்பவரே வெற்றிப் பெற்றவராவார் ... இதுதான் ஜ/சல்லிக்கட்டு .
முன்பெல்லாம் காளை கட்டப்படாமல் தான் இவ்விளையாட்டு நடந்திருக்கிறது . இப்பொழுது மாடுபிடி வீரரின் குறைந்த பட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ... மாடு ... திடலின் மத்தியிலுள்ள முளையில் கட்டப்பட்டிருக்கும்.... சொல்லப் போனால் தடை செய்ய வேண்டியது இம்முறைதான்

அதை இதுவென எடுத்து / விவரம் தெரியாமல் அவலை நினைத்து , உரலை இடித்துக் கொண்டிருக்கிறார்கள்

1 கருத்து:

  1. எப்படியோ இந்த வருஷம் ஜல்லிக்கட்டும், நடக்கலை, ஏறு தழுவதலும் நடக்கலை.

    பதிலளிநீக்கு